Chinna Pura

Chinna Pura Song Lyrics In English


ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ

சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஆஅஆஅஆஅஆஅஆஅஆ

ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மா

சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்


ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன்
வரும் நாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா
சொல்லம்மா

சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே