Chinnachiru Kanmalar

Chinnachiru Kanmalar Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

பாப்பா உன் அப்பாவை
பார்க்காத ஏக்கமோ
பாய்ந்தே மடிதனில்
சாய்ந்தால்தான் துக்கமோ
தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
தாமரை கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
குப்பைதனில் வாழும் குண்டு மணி சரமே
குங்கும சிமிழே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ


ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ
எதிர் கால வாழ்வில் கவனம் கொண்டாயோ
நாளை உலகம் நல்லூரின் கையில்
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்
மாடி மனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ