Chinnan Chiru Magalai

Chinnan Chiru Magalai Song Lyrics In English


சின்னஞ் சிறு மகளை சிரித்து வந்த பூமகளை தன்னந்தனி வழியே தவிக்க விட்டுச் சென்றாயே

சின்னஞ் சிறு மகளை சிரித்து வந்த பூமகளை தன்னந்தனி வழியே தவிக்க விட்டுச் சென்றாயே

சின்னஞ் சிறு மகளை சிரித்து வந்த பூமகளை

ஐயா உன் வாசலிலே அடியெடுத்த நாள் முதலாய் கையோடு வைத்திருந்தாய் கண்கள் என்று காத்திருந்தாய்

பாலெடுத்துக் கொடுத்திருந்தாள் பழமெடுத்து ஊட்டி வைத்தாள் பாலெடுத்துக் கொடுத்திருந்தாள் பழமெடுத்து ஊட்டி வைத்தாள்

பூ முடித்த கரங்களிலே பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள் பூ முடித்த கரங்களிலே பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள்

ஆசை அலைகளிலே அவளுடன் நீந்தி வந்தாய் ஆசை அலைகளிலே அவளுடன் நீந்தி வந்தாய் பாதி வரை வந்த ஐயா மீதி வழி மறந்து விட்டாய்

பஞ்சணையில் நீயுறங்க பக்கத்திலே அவளுறங்க கொஞ்சி வரும் பிஞ்சு மகள் குரல் ஓடி வர பஞ்சணையில் நீயுறங்க பக்கத்திலே அவளுறங்க


தாயாரை உறங்க விட்டு தங்கத்தை நீ தொட்டிலிட்டு தாயாரை உறங்க விட்டு தங்கத்தை நீ தொட்டிலிட்டு

வாயார புகழ்வதெல்லாம் மயக்கத்தில் கேட்டிருப்பாள் வாயார புகழ்வதெல்லாம் மயக்கத்தில் கேட்டிருப்பாள்

நீங்களா என்றெழுவாள் நெருங்கி வந்து நின்று கொள்வாள் நீங்களா என்றெழுவாள் நெருங்கி வந்து நின்று கொள்வாள் தூங்குங்கள் என்று சொல்வாள் தொட்டிலுக்குத்தான் நடப்பாள்

ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம்

பொன்னாசைக் கொள்ளவில்லை பொருளாசைப் படவுமில்லை பூவாசை வைத்திருந்தாள் பூவை நீ பறித்தாயா

எங்கே நீ மறைந்தாலும் எந்த வழி சென்றாலும் அங்கெல்லாம் அவள் வருவாள் ஐயா உன்னைப் பின் தொடர்வாள்