Chithira Poovizhi |
---|
சித்திரப் பூ விழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்திட யார் வந்தவரோ
யார் நின்றவரோ
யார் வந்தவரோ
தென்றல் அழைத்து வர
தங்க தேரினில் வந்தாரே
தென்றல் அழைத்து வர
தங்க தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்றவர் என்னவரே
இடம் தந்த என் மன்னவரே
சித்திரப் பூ விழி வாசலிலே
அவர்தான் நின்றவரே
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்தவர்தான் என்னவரே
யார் நின்றவரோ அவர்தான் என்னவரே
கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ இந்த
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ
உன்னை மட்டும் அருகினில் வைத்து
தினம் தினம் சுற்றி வருபவரோ
இனி கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் மட்டும் தெரிந்தவரோ
சித்திரப் பூ விழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்திட யார் வந்தவரோ
வண்ணக் கருவிழி தன்னில் வரும் விழி
என்று அழைப்பதுவோ
பசும் பொன்னிற் புதியதை கண்ணன் என பெயர்
சொல்லி துதிப்பதுவோ
ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி
மன்னவன் என்பதுவோ இல்லை
தன்னைக் கொடுத்தனை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புது மலரே
அவர் நெஞ்சம் மலரில்லையே
மனம் எங்கும் நிறைந்தவரே
ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஒ ஓ
ஹோஹோ ஓஒ ஹோ ஓஓஒ
சித்திரப் பூ விழி வாசலிலே
அவர்தான் நின்றவரே
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்தவர்தான் என்னவரே
யார் நின்றவரோ அவர்தான் என்னவரே