Chiththirame Solladi

Chiththirame Solladi Song Lyrics In English


சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி

சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ

சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி

கன்னி இதழ் மீது
தென்றல் படும் போது
அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்த சுகம் வேறு
சொந்தம் கொள்ளும் போது
அதில் பொல்லாத பயம் இருக்கும்

சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி

நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ

சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி

மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா

அது மாறி விட்டால்
இந்த மேனியிலே
ஒரு தேனாறு ஓடும் இல்லையா

இடை தானாக வாடும் இல்லையா

சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி


பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ

பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ

அந்தக் கோலம் எல்லாம்
இதழ் மீது வந்தால்
இன்பம் கோடான கோடி இல்லையோ

அதைக் காணாமல் போவதில்லையோ

சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி

நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ

ஆஅஆ

சித்திரமே சொல்லடி

 முத்தம் இல்லை சொல்லடி