Deivam Thandha Vaazhvukkellaam |
---|
தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்
நெஞ்சமே நீராகுதே
அவன் அன்பைக் கண்டு
கண்களும் ஆறாகுதே
தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்
நான் புகழ்ந்து பாட்டுச் சொன்னால்
தெய்வத்துக்கு லாபம் என்ன
மனம் மகிழ்ந்து பூஜை செய்தால்
இறைவனுக்கு ஆவதென்ன
செய்த வினை தீர்ந்து போகும்
செய்யும் வினை நன்மை காணும்
நாம் இருக்க பூமி தந்தான்
நீ களிக்க செல்வம் தந்தான்
அன்பு செய்ய அன்னை தந்தான்
கூட மனையாளும் தந்தான்
என்ன நீ செய்தபோதிலும்
அவன் அன்பின் முன்னே
ஈடுதான் ஆகிடுமா
தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்
ஆடும் மேய்த்த காளிதாசன்
அழகு கவி சொன்னதென்ன
அன்னை அவள் ஞானப்பாலில்
சம்பந்தராய் ஆனதென்ன
யாவருக்கும் தேவை இன்று
தெய்வ அருள்தானே
இன்பவழி இங்கிருக்கு
துன்ப வழி மூடடா
கங்கை நீரும் கையிருக்க
கானல் நீரும் ஏனடா
அம்மனின் பேர் சொல்லடா
ஒரு துன்பம் இல்லா இன்பமே
நீ காணடா
தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்
நெஞ்சமே நீராகுதே
அவன் அன்பைக் கண்டு
கண்களும் ஆறாகுதே
தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்
என்ன நன்றி சொல்லுவோம்
அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்
முன்பு என்ன செய்தோம்