Deivangal

Deivangal Song Lyrics In English


தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூப் பூத்தது
பூ ஒன்று சேய் ஆனது
பெண் ஒன்று தாய் ஆனது

ஈரைந்து மாதம்
தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே
கை வந்து சேரும்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்

தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூப் பூத்தது

பிள்ளை இல்லாத வீடு
முல்லை இல்லாத காடு
தொட்டில் இல்லாத இல்லம்
தென்றல் இல்லாத மன்றம்

சின்னப் பொன்வண்டு
வண்ணக் கண் ரெண்டு
ஆகாய நீலம் காட்டும்
கன்னம் பூச்செண்டு
கட்டி கற்கண்டு
செந்தூரக் கோலம் தீட்டும்

மார்போடு சேர்த்து
முந்தானை மூடி
பாலூட்டும் தாயின்
ஆனந்தம் கோடி
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்

பூ ஒன்று சேய் ஆனது
பெண் ஒன்று தாய் ஆனது

ஈரைந்து மாதம்
தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே
கை வந்து சேரும்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்


பூ ஒன்று சேய் ஆனது
பெண் ஒன்று தாய் ஆனது

அன்னை என்றான பின்பு
துன்பம் முந்நூறு நாட்கள்
பிள்ளை கை வந்த பின்பு
கண்ணில் சந்தோஷப் பூக்கள்

பிள்ளைச் செல்வங்கள்
பேசும் தெய்வங்கள்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
தாய்மை இல்லாத
பெண்மை எந்நாளும்
காணாது அன்பின் எல்லை

கை வீசி ஆடும்
வைகாசி மேகம்
என் வீடு சேர
நான் செய்த யோகம்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்

தெய்வங்கள் கண் பார்த்ததுஊ
தோட்டத்தில் பூப் பூத்தது
பூ ஒன்று சேய் ஆனதுஊ
பெண் ஒன்று தாய் ஆனது

ஈரைந்து மாதம்
தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே
கை வந்து சேரும்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்

தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூப் பூத்தது