Desathin Theeratha

Desathin Theeratha Song Lyrics In English


தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
அவமானச் சின்னங்களே

திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
அதிகார வர்க்கங்களே

வெள்ளைக் கொடி ரத்த நிறமானது
உள்ளங்களே யுத்தக் களமானது
பூகம்பம் இப்போது
ஆரம்பம் பாருங்களேஏ

தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
அவமானச் சின்னங்களே

திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
அதிகார வர்க்கங்களே

ஹாஆஅஆஅஆஅ(3)

கேள்விக்கு விடை இல்லையா

கேள்விக்கு விடை இல்லையா
எங்கள் இரவுக்கு விடிவில்லையா
கண்ணீரில் அன்றாடம்
உலை வைக்கிறோம்
இங்கு காந்திக்கு எதற்காக
சிலை வைக்கிறோம்
வீட்டுக்கு வீடிங்கு
செடி வைக்கிறோம்
ஏழை வர்க்கங்கள் வளராமல்
வெடி வைக்கிறோம்

பலர் வாட சிலர் வாழ
இரு வர்க்கம் இல்லாத
சமதர்ம பூ பூக்குமா
காலம் வரும் நல்ல நேரம் வரும்
ஏழைகளின் வாழ்வில் வெளிச்சம் வரும்

தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
அவமானச் சின்னங்களே

திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
அதிகார வர்க்கங்களே

ஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅ

ஊர்கோலம் போகின்றது
இங்கு ஒரு உள்ளம் வேகின்றது
இதயத்தில் தாங்காத
அடி வீழ்ந்தது
இந்த இளம் பூவின் தலை மீது
இடி வீழ்ந்தது


கடமைகள் இந்நேரம்
கண்ணானது
நெஞ்சம் கண்ணீரை சிந்தாமல்
கல்லானது
மாகாளி திரிசூலி
அறம் காக்கும் கருமாரி

மாகாளி திரிசூலி
அறம் காக்கும் கருமாரி
இவளும் அந்த அவதாரமோ
நியாயங்களை அன்னை நிலை நாட்டுவாள்
நெற்றிக் கண்ணால் எங்கும் அனல் மூட்டுவாள்

தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
அவமானச் சின்னங்களே

திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
அதிகார வர்க்கங்களே

வெள்ளைக் கொடி ரத்த நிறமானது
உள்ளங்களே யுத்தக் களமானது
பூகம்பம் இப்போது
ஆரம்பம் பாருங்களேஏ

ஹாஆஅஆஅஆஅ(3)

சாவுக்கு யார் காரணம்

இந்த சாவுக்கு யார் காரணம்
நாளை சமுதாயம் பதில் கூறணும்
வாழ்வுக்குப் போராடும் தொழிலாளிகள்
இந்த வர்க்கத்தில் சில பேர்கள் கருங்காலிகள்

கொதிக்கின்ற நெருப்பாகும்
வேர்வைத் துளி
செங்கொடி ஏந்தும் பாட்டாளி
தூங்கும் புலி
வாருங்கள் எல்லோரும்
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
இறுதி வரை போராடுவோம்
தொழில் கூடமா இல்லை பலி பீடமா
முதலாளியா இல்லை கொலையாளியா

தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
அவமானச் சின்னங்களே

திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
அதிகார வர்க்கங்களே

வெள்ளைக் கொடி ரத்த நிறமானது
உள்ளங்களே யுத்தக் களமானது
பூகம்பம் இப்போது
ஆரம்பம் பாருங்களேஏ