Devan Magan Mulmudi |
---|
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
பொன்மேனி வண்ணம் செந்நீரிலே
தள்ளாடி செல்லும் இந்நாளிலே
காடும் நாடும் கண்ணீரிலே
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்
அடி வாங்குமோ புவி தாங்குமோ
பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்
அடி வாங்குமோ புவி தாங்குமோ
தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை
தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை
தாய் மேரி திருவுள்ளம் தடுமாறுமோஓ
சிலுவையின் சுமையோ
தாங்கும் தோள்தான் புண்ணாகுமோ
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
மழை மேகம் வானம் இடி மின்னல் காற்று
அழுகின்றதோ தொழுகின்றதோ
தேவாதி தேவன் தெய்வீக ஜீவன்
தேவாதி தேவன் தெய்வீக ஜீவன்
பலி பீடம் தனை நோக்கி வருகின்றதோஓ
கருணையின் வடிவே
காக்கும் எங்கள் குழந்தை ஏசுவே
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்