Devan Thiruchabai Malar Idhu |
---|
தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்
தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்
விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன் மானை உன் சாயலில் காண்கிறேன்
என்றும் அன்னை மரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தேவியே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே
தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்
கண்ணே மணியே பொன் எழில் ராணியே
அன்பே அமுதே அருந்தவ செல்வியே
கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
கவி பாடி வா கதை சொல்லி வா
நம் வாழ்விலே இன்பம் நிறைக்கவா
தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்