Dhairiyamaga Sol Nee Manithan Thaana |
---|
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
இல்லை
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம் நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம்
மனமும் நல்ல
குணமும் உன் நினைவை
விட்டு விலகும் நீ தான் ஒரு
மிருகம் இந்த மதுவில் விழும்
நேரம்
மானை போல்
மானம் என்றாய் நடையில்
மத யானை நீயே என்றாய்
ஆஆ மானை போல்
மானம் என்றாய் நடையில்
மத யானை நீயே என்றாய்
வேங்கை போல்
வீரம் என்றாய் அறிவில்
உயர்வாக சொல்லிக்
கொண்டாய் மதுவால்
விலங்கினும் கீழாய்
நின்றாய்
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
அலையாடும்
கடலை கண்டாய் குடித்து
பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக்
கண்டாய் நீயோ மதுவாலே
ஆட்டம் கண்டாய்
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
பொருள் வேண்டி
திருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி
விலையை சொல்வாய்
பொருள் வேண்டி
திருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி
விலையை சொல்வாய்
துணிவோடு
உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக
மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே
மனிதன் என்பாய்
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
இல்லை
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம்
மனமும் நல்ல
குணமும் உன் நினைவை
விட்டு விலகும் நீ தான் ஒரு
மிருகம் இந்த மதுவில் விழும்
நேரம்