Dhairiyamaga Sol Nee Manithan Thaana

Dhairiyamaga Sol Nee Manithan Thaana Song Lyrics In English


தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா

இல்லை
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம் நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம்

மனமும் நல்ல
குணமும் உன் நினைவை
விட்டு விலகும் நீ தான் ஒரு
மிருகம் இந்த மதுவில் விழும்
நேரம்

மானை போல்
மானம் என்றாய் நடையில்
மத யானை நீயே என்றாய்
ஆஆ மானை போல்
மானம் என்றாய் நடையில்
மத யானை நீயே என்றாய்

வேங்கை போல்
வீரம் என்றாய் அறிவில்
உயர்வாக சொல்லிக்
கொண்டாய் மதுவால்
விலங்கினும் கீழாய்
நின்றாய்

தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா

அலையாடும்
கடலை கண்டாய் குடித்து
பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக்
கண்டாய் நீயோ மதுவாலே
ஆட்டம் கண்டாய்


தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா

பொருள் வேண்டி
திருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி
விலையை சொல்வாய்
பொருள் வேண்டி
திருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி
விலையை சொல்வாய்

துணிவோடு
உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக
மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே
மனிதன் என்பாய்

தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா

இல்லை
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம்

மனமும் நல்ல
குணமும் உன் நினைவை
விட்டு விலகும் நீ தான் ஒரு
மிருகம் இந்த மதுவில் விழும்
நேரம்