Dharma Devan Koyilil

Dharma Devan Koyilil Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்



தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்
இல்லையென்று எந்நாளுமே சொல்லாதவன்
செல்வமெல்லாம் தன் சொந்தமாய் கொள்ளாதவன்
வள்ளல் என்று நாளும் பேர் எடுத்த

தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்

தர்மத்தை நான் கேட்க கையில்
தாரை வார்த்திடு
ஜென்மங்கள் இல்லாமல் சொர்க்கம்
சென்று ஓய்வெடு
இங்கு நீயும் வந்த வேலைதான்
பூர்த்தி ஆனது
இன்னும் நீண்ட காலம் வாழுமே
உன் கீர்த்தியானது

இன்று ஊர் விட்டு நீ செல்ல
தேர் கொண்டு வந்தேனே
தென்னாட்டு மன்னவனே
இன்று ஊர் விட்டு நீ செல்ல
தேர் கொண்டு வந்தேனே
தென்னாட்டு மன்னவனே
ஏழை பிள்ளை யார்க்கும் சோறளித்த

தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்
இல்லையென்று எந்நாளுமே சொல்லாதவன்
செல்வமெல்லாம் தன் சொந்தமாய் கொள்ளாதவன்
வள்ளல் என்று நாளும் பேர் எடுத்த


தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்

தாய்க்கு கோயில் கட்டி
தோட்டத்திலே வச்சவனே
தாயில்லா புள்ளைக்கெல்லாம்
தாயாகி வந்தவனே
ஏழை வாய்க்கு அரிசியிட்டு
வறுமையைத்தான் தீர்த்தவனே
உன் வாய்க்கரிசி நாங்கள் இட
வானகம்தான் போனவனே
அள்ளி அள்ளி தந்த கைதான்
அசையாம கெடக்குதய்யோ
ஆடி ஆடி வந்த ரதம்
ஆடாம இருக்குதய்யோ

சிலுக்கு சட்டையெல்லாம்
சீராக இருக்கையிலே
வச்சக் குல்லா வச்சப்படி
வண்ணமாய் இருக்கையிலே
ரோசாப்பூ மேனி மட்டும்
யாத்திரையில் வாடிடிச்சு
ராஜ்ஜியத்த ஆண்டவனின்
மூச்சடங்கி போயிடுச்சே

போதும் ஒழைச்சதென
பொன்னுலகம் போனீகளா
சாமி அழச்சதின்னு
சொர்க்கத்துக்கு போனீகளா
ஏன்யா என் துரையே இது உனக்கெ நல்லாருக்கா
ஏழை சனங்களுக்கு இனிமேலே யாரிருக்கா

தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்
இல்லையென்று எந்நாளுமே சொல்லாதவன்
செல்வமெல்லாம் தன் சொந்தமாய் கொள்ளாதவன்
வள்ளல் என்று நாளும் பேர் எடுத்த

தர்ம தேவன் கோயிலில்
கையேந்தி கேட்கிறேன்
உன்னை மீண்டும் வந்த கர்ணனாய்
எந்நேரம் பார்க்கிறேன்