Dharmam Thalai |
---|
தர்மம் தலை
காக்கும் தக்க சமயத்தில்
உயிர் காக்கும்
கூட இருந்தே
குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து
நிற்கும்
செய்த தர்மம்
தலை காக்கும் தக்க
சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே
வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழ
விடாதவர் வந்து நம்
வாசலில் வணங்கிட
வைத்து விடும்
செய்த தர்மம்
தலை காக்கும் தக்க
சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக்கொடுத்து
வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில்
நல்லவர் என்றும்
கெடுவதில்லை
இது நான்குமறை தீர்ப்பு
என்றும்
தர்மம் தலை
காக்கும் தக்க
சமயத்தில்
உயிர் காக்கும்
கூட இருந்தே
குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து
நிற்கும்