Dhoori Dhoori Manathil Oru Dhoori

Dhoori Dhoori Manathil Oru Dhoori Song Lyrics In English


தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புதுத் தாளம் புது ராகம்
அதில் சேரும் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புதுத் தாளம் புது ராகம்
அதில் சேரும் அரங்கேறும்
வஞ்சிப் பூ உன் நெஞ்சத்தில் கொஞ்சும்

தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி

தூது போ என்று
நான் மேகத்தை வேண்டினேன்
தூக்கமே இன்றியே நாள் எல்லாம் வாடினேன்

நாளொரு பாதையில் நாட்களை ஓட்டினேன்
பூவை உன் ஜாடையில் பாதையை மாற்றினேன்

மாலைக் கருக்கலில் சோலை அழைத்ததும்
பூந்தென்றல் வாராதோ

தோகை துடிக்கையில் தேவன் அழைத்ததும்
தோள் வந்து சேராதோ

புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி

புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

தேர் வரும் என்றுதான்
தெய்வமும் நின்றதோ
ஊர்வலம் போய் வர நாள் ஒன்று வந்ததோ


நாயகி என் மனம் நாயகன் ஆலயம்
ஆயிரம் பூஜைகள் காலையும் மாலையும்

ஆவல் கலந்திடும் காவல் கடந்திடும்
யார் என்ன சொன்னாலும்

தேவன் விதிப் படி காதல் வளர்ந்தது
தேன் சிந்தும் எந்நாளும்

புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

தூரி தூரி மனதில் ஒரு தூரி

லாலி லாலி விழியில் ஒரு லாலி

புதுத் தாளம் புது ராகம்

அதில் சேரும் அரங்கேறும்

வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி