Dhoori Dhoori Manathil Oru Dhoori |
---|
தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புதுத் தாளம் புது ராகம்
அதில் சேரும் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புதுத் தாளம் புது ராகம்
அதில் சேரும் அரங்கேறும்
வஞ்சிப் பூ உன் நெஞ்சத்தில் கொஞ்சும்
தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
தூது போ என்று
நான் மேகத்தை வேண்டினேன்
தூக்கமே இன்றியே நாள் எல்லாம் வாடினேன்
நாளொரு பாதையில் நாட்களை ஓட்டினேன்
பூவை உன் ஜாடையில் பாதையை மாற்றினேன்
மாலைக் கருக்கலில் சோலை அழைத்ததும்
பூந்தென்றல் வாராதோ
தோகை துடிக்கையில் தேவன் அழைத்ததும்
தோள் வந்து சேராதோ
புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
தேர் வரும் என்றுதான்
தெய்வமும் நின்றதோ
ஊர்வலம் போய் வர நாள் ஒன்று வந்ததோ
நாயகி என் மனம் நாயகன் ஆலயம்
ஆயிரம் பூஜைகள் காலையும் மாலையும்
ஆவல் கலந்திடும் காவல் கடந்திடும்
யார் என்ன சொன்னாலும்
தேவன் விதிப் படி காதல் வளர்ந்தது
தேன் சிந்தும் எந்நாளும்
புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புதுத் தாளம் புது ராகம்
அதில் சேரும் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்
தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி