Eedatra Patthinikku

Eedatra Patthinikku Song Lyrics In English


அத்தான் நீங்கள் கொலைக்காரரா
கொற்றவனைக் கொன்றீர்களா
கூறுங்கள் அத்தான் கூறுங்கள்

ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த எண்ணங்களைக் கொன்றவன்
நான்
வாழத் தகுந்தவளைக் வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்புதனைக் கொன்றவன் நான்

அந்த கொலைகளுக்கே ஆளாய் இருந்துவிட்டேன்
இனி எந்த கொலை செய்தாலும்
என்னடி என் ஞானப்பெண்ணேஏ
என்னடி என் ஞானப்பெண்ணே
என்னடி என் ஞானப்பெண்ணே

ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

ஆரம்பம் ஆவது
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே

அத்தான் அத்தான்
உங்கள் மீது கொடும் பழி வந்திருக்கிறதே
அத்தான் என் மீது உண்மையாக அன்பிருந்தால்
அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
யாருக்கும் அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்

அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானா ஞானப் பெண்ணேஏ
அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானா ஞானப் பெண்ணேஏ
துன்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே

ஆரம்பம் ஆவது
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே

அத்தான் உண்மையைக் கூற முடியாதபடி
அவ்வளவு பெரிய தவறு என்ன செய்து விட்டீர்கள்

தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணேஏஏ
தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே
பதறி பதறி நின்று கதறி கதறிப் புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே


ஆரம்பம் ஆவது
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

ஆஆஆஆஆஆஆஆ
அத்தான்அத்தான்
இது என்ன அத்தான் இது என்ன
உங்கள் கண்கள் எங்கே அத்தான்
உங்கள் கண்கள் எங்கே

கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போகவிட்டேன் பார்வையை
அவன் பொறுத்திருந்தே புரிந்துக் கொண்டான் வேலையை
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போகவிட்டேன் பார்வையை
அவன் பொறுத்திருந்தே புரிந்துக் கொண்டான் வேலையை
கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி

கருணையே வடிவமான தெய்வமா
உங்கள் கண்களைப் பறித்துக்கொண்டது

எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி

நீதி நிலைப்பெற
என் நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையைக் கூறுங்கள்
உங்கள் மனைவி கேட்கிறாள்
என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான்

சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்
சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி

மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை
வாழ்த்துவதாகாதடிஈஈஈ
மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி
தங்கம் மன்னிக்ககூடாதடி
சிங்காரம் கேட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் எதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி