Eerakkaathae

Eerakkaathae Song Lyrics In English


ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து

மலங்காட்டு மயிலே
மச்சம் உள்ள முயலே
முள்ளு மேல துணி காய போடுற

தஞ்சம் வந்து கெடக்கேன்
தப்பி வந்து பொழய்க்கேன்
துன்பத்துக்கு வாக்கபட பாக்குற

பாசத்த உள்ள வச்சு
ஒரு பாசாங்கு பண்ணாதீக
மண்ணுக்குள் நூல்கோல் போல
என்ன கண்ணுக்குள் மூடாதீக

ஓ மழையில் ஒதுங்க தானே
நான் இரவில் பனியா வந்தேன்
பனிய குடிக்கத்தானே
நீ பகலில் வெயிலா வந்த

ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து

செஞ்சு வச்ச கல் ஆனேன்
உன்னால சேல கட்டும் பொண் ஆனேன்
என் சேல அழுக்காக்கவா
உள்கூடு வேர்வை பூக்க வா நீ வா


ஆம்பளைக்கி சேல கட்டி வந்தாக்க
பொம்பளன்னு நம்பனுமா
சொல்லாம வழி பார்த்து போ
கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ

அட உசிர உள் வாங்கும் காத்துதான்
என் கூந்தல் போர்வை ஆகுமே
ஆட்டுதோலு என் போர்வை ஆகலாம்
வெள்ளாடு போர்வை ஆகுமா
செல்ல கருப்பா என்ன கொழுப்பா
உண்மை சொல்லு

உன்னி பூச்சி எப்போதும்
காம்போட ஒட்டி கிட்டா போகாது
என் உசிர உரிஞ்சாதடி
என் பொழப்பில் ஈரம் இல்ல போடி

செக்கு பட்ட எள் போல
சும்மா நீ நொக்கு பட்டு போகாத
என் பேச்ச நீ கேளையா
என் தோளில் தேமல் பார்த்து போய்யா

ஒரு தலையே இல்லாத பூச்சி நான்
நீ கிரீடம் சூட்ட பாக்குற
தன் தலைய மண்னோட மூடுற
தீ கோழி போல ஏய்க்கிற
என்ன மடக்க மார்பில்
இடுக்க பாக்குறியா

ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து