Eeramai Eeramai

Eeramai Eeramai Song Lyrics In English


னானனா னானனா னானனா னா னானா
னானனா னானனா னானனா னா னானா

ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று
தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ

ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று
தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு

தென்றல் செல்கின்ற வழியில்
உள்ளம் செல்கின்றது

ஓஹொ தென்றல் செல்கின்ற வழியில்
உள்ளம் செல்கின்றது
கள்ளச் சிரிப்பொன்று வந்து
நிற்கச் சொல்கின்றது

நிற்கவா போகவா
கேட்குதே பாதங்கள்
ஆடவா பாடவா
ஏனிந்த தாபங்கள்

ஓடும் நதி நீர் மேலே
ஓடும் ஒரு பூ போலே
ஓடுதே என் நெஞ்சம் ஏனோ

ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று

தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு

கண்கள் காணாத பூக்கள்
கனவில் பூக்கின்றது


ஏஹே கண்கள் காணாத பூக்கள்
கனவில் பூக்கின்றது
காற்று கேட்காத பாடல்
காதில் கேட்கின்றது

தாவரம் போல நான்
தனிமையில் வாழ்ந்தேனே
பறவையின் குரலிலே
கலவரம் ஆனேனே

தேடல் இங்கு ஓர் இன்பம்
தேடுவது தான் துன்பம்
தேட வைத்ததாரோ யாரோ

ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று

தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு

பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே

வேண்டுவது யாரோ யாரோ

இருவர் : ஈரமாய் ஈரமாய்
பூ மழை பூங்காற்று
தூரமாய் தூரமாய்
மூங்கிலின் ஓர் பாட்டு