Elaiyudhir Kaalam |
---|
இலையுதிர் காலம் என்றால்
என்னவென்று அறியாத காடு அதுஉ
யார் அதனை சாபம் இட்டு
சோகங்களின் மேடை என மாற்றியதுஉ
செடி கொடி மரங்கள் அழுவது எதற்கு
சிங்கம் புலி சிறுத்தை கண்ணீரோடு இருக்கு
இந்த நிலை காட்டுக்கு ஏனுங்க
தூங்கும் தேவதை கதை கேளுங்க
மாதங்கள் முழுவதும் மழை வெயில்
ஒன்றாய் வரும் தேசம் மின்மினி தேசம்
ஹே அங்கே ஓர் இளவரசி
பூக்கள் வந்து அவளிடம் பேசும்
அவளும் தருவாளே வாசம்
ஓர் நாள் நம் இளவரசி
விளையாட போனாலே
மயிலோடும் மீனோடும் மலை
நதியில் குளித்தால்
புள்ளி மானின் உடம்பில்
புள்ளி வைத்து கோலம் போட்டால்
யானை மேலே ஏறி
அவள் காட்டை ஏலம் கேட்டால்
மரத்தில் ஏறி பூக்கள் பறித்தால்
வரும் ஆபத்தினை அறியவில்லை
அந்த மரம் மரம் இல்லை
அது ஒரு மந்திர மாய கிழவிஈ
காலமெல்லாம் தூங்கு என்று
கோபம் கொண்டு சாபம் தந்தாள்
அந்த கிழவிஈ
அன்று முதல் அவளும்
தூங்கி கொண்டே வளர்ந்தால்
சாவியினை தொலைத்த
பொம்மை என கிடந்தாள்
இன்னும் அவள் மீண்டு வர வழி என்ன
ஒரு மன்னவனும் வந்திடுவான் இனி என்ன
தப்பென்று தெரிந்தால்
தட்டி கேட்க கடவுள் அனுப்பும் காலன்
சிவலை மாடன்
ஹே மார்பெங்கும் விழிப்புண்
கவசமாய் கொண்ட வம்சக்காரன்
ஏழு கடல் தாண்டும் சூரன்
ரத்தத்தால் யுத்தத்தை முடித்திட்ட வீரன்
முத்தத்தால் முதல் முறை
ஜெயிக்கத்தான் போறான்
காட்டுக்கு ஒரு நாள் வருவான்
அவள் கண்களை கைகளில் தொடுவான்
காதல் முத்தம் தருவான்
அவள் சாபம் நீங்க செய்வான்
காட்டு தேரில் வருவான் பாருங்க
ஒரு காதல் பூத்த கதையை கேளுங்க
தாய் தந்த முத்தத்திலலே
பாசம் என்றால்
என்னவென்று கண்டேனேஏ
ஆஆஆஆஆஆ
அவள் தந்த முத்தத்தில் பாசத்தோடு
வேறொன்றையும் கண்டேனே
ஆஆஆஆஆஆ
ஏழேழு ஜென்மம் தொடர்கின்ற உறவு
ஏழே நொடியில் நிகழ்ந்தது இன்று
அந்த முத்தம் அவள் தந்த
அந்த நொடி ஒரு நட்சத்திரம்
வானத்திலே பூத்தடி
தாய் தந்த முத்தத்தில் பாசம் என்றால்
என்னவென்று கண்டேன்
தாய் தந்த முத்தத்தில் பாசம் என்றால்
என்னவென்று கண்டேன்
அன்று கண்டேன்
ஓ அவள் தந்த முத்தத்தில் பாசத்தோடு
வேறொன்றையும் கண்டேன்
ஓ அவள் தந்த முத்தத்தில் பாசத்தோடு
வேறொன்றையும் கண்டேன்
நான் சிலையாகி நின்றேன்
ஏழேழு ஜென்மங்கள்
தொடர்கின்ற காதல் இது
என்னை அவள் பார்த்த
அந்த ஏழு நொடி போதும்
காலம் உள்ள காலம் வரைக்கும்
காலம் உள்ள காலம் வரைக்கும்
இந்த காதல் முத்தம் காற்றில் நிலைக்கும்