Elanthaari |
---|
எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்
வெரசா தொடவா முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத
எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்
ஒன்ன எனக்கு ரொம்பப் புடிக்கும்
சொல்லுறத கேளு
கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சு
சுத்துது என் காலு
கொத்துக் கறி போல நீயும் ஏன்
என்ன கொட சாய்க்குற
வெக்கயில தூரல் மாதிரி
நெக்குருகப் பாக்குற
கருவாட்டப் பாத்தா வட்டம் போடும் காக்க
அது போல நானே ஒன்ன சேரும் வாழ்க்க
மனசால என நீயும் மஞ்சக் குளிக்க வையி
எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
நெஞ்ச பொளந்து உள்ள இருக்கும்
ஒன்ன நிதம் பாப்பேன்
உச்சந்தலையில் அம்மி அரைக்கும்
முத்தம் இடக் கேப்பேன்
மெத்தையில தூங்கிடாம நீ
வித்தைகள காட்டிடு
கையில் உள்ள ரேகை தேயணும்
கட்டிக் கொள்ள பாத்திடு
உனக்காகத் தானே உப்பு புளி காரம்
ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்
தலவாழ எல போட்டு தண்ணி தெளிச்சு வையி
எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
வெரசா தொடவா முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத
எளந்தாரி ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
தருவேனேஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
எளந்தாரி