Ellorukkum Oru Vaedham |
---|
எல்லோருக்கும் ஒரு வேதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
எல்லோருக்கும் ஒரு கீதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
நம்பிக்கையோடு பாருங்கள்
நாளை என்பது நமக்கு
நம்பிக்கையோடு வாழுங்கள்
விடிந்தே தீரும் கிழக்கு
கல்லுக்குள் இருக்கின்ற
தேரைக்கும் உணவுண்டு
நெல்லுக்குள் இருக்கின்ற
விதைக்கும் ஓர் உயிர் உண்டு
கர்ப்பத்தில் இருக்கின்ற
பிள்ளைக்கும் காற்றுண்டு
உள்ளுக்குள் இருக்கின்ற
வேருக்கும் நீர் உண்டு
போகட்டும் எனக்கும் என்ன இருக்காதா
இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா
உனக்கும் எனக்கும் என்ன இருக்காதா
இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா
எல்லோருக்கும் ஒரு வேதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
எல்லோருக்கும் ஒரு கீதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
ஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
அலை பாடும் கீதத்தில்
நம்பிக்கை இருக்கிறது
மணி ஓசை நாதத்தில்
நம்பிக்கை அழைக்கிறது
விடிகின்ற பொழுதெல்லாம்
நமக்காக விடிகின்றதே
வெற்றிக்கு பக்கத்தில்
நம் வாழ்க்கை சிரிக்கிறது
பாதையினுள் புல்லும் உண்டு
மறக்காதே
எந்த வேலையிலும்
வெற்றி வரும் கலங்காதே