Ellorum Sollu Pattu |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே
வையகம் ஒரு மேடையே
வேஷமே
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
நாயகன் மேலிரிந்து
நூலினை ஆட்டுகின்றான்
நாமெலாம் பொம்மை என்று
நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு
காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி
காட்சியை மாற்றுவான்
ரயில் சிநேகமாய்
புயல் அடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
கோவலன் பாதை தன்னில்
மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால்
கண்ணகி எது இன்று
மானிடன் ஜாதகம்
இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை
தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ
எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
மேடையே
வையகம் ஒரு மேடையே
வேஷமே
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்