En Aaruyirae Enadhu

En Aaruyirae Enadhu Song Lyrics In English


என் ஆருயிரே எனது கண்மணியே
உன்னை நான் கருவில்
ஓராம் மாதம் உடலது தளர்ந்து
ஈராம் மாதம் இடையது மெலிந்து
மூன்றாம் மாதம் முகமெல்லாம் வெளுத்து
நான்காம் மாதம் நற்கதிர் நெகிழ்ந்து
ஐந்தாம் மாதம் அன்னநடை மறந்து
ஆறாம் மாதம் அடி வயிறு கனத்து

ஏழாம் மாதம் என் நாவுக்கினியது புசித்து
எட்டாம் மாதம் எழில் மேவும் நிறைமதியாக
ஒன்பதாம் மாதம் உன் மாமன்மார்கள்
சீர்வரிசையில் செய்ய
பத்தாம் மாதம் பால் பழம் உண்டு
உத்தமமாக உந்தனை பெற்று
என் கண்ணையே உந்தனை பெற்று
ஐயோ பாம்புக்கு இரையாக
பாரினிற் கொடுத்தே பரிதவித்தேன்
உள்ளம் பதறினேன் அப்பா
ஐயோ லோகிதாசா லோகிதாசா