En Aaruyirae Enadhu |
---|
என் ஆருயிரே எனது கண்மணியே
உன்னை நான் கருவில்
ஓராம் மாதம் உடலது தளர்ந்து
ஈராம் மாதம் இடையது மெலிந்து
மூன்றாம் மாதம் முகமெல்லாம் வெளுத்து
நான்காம் மாதம் நற்கதிர் நெகிழ்ந்து
ஐந்தாம் மாதம் அன்னநடை மறந்து
ஆறாம் மாதம் அடி வயிறு கனத்து
ஏழாம் மாதம் என் நாவுக்கினியது புசித்து
எட்டாம் மாதம் எழில் மேவும் நிறைமதியாக
ஒன்பதாம் மாதம் உன் மாமன்மார்கள்
சீர்வரிசையில் செய்ய
பத்தாம் மாதம் பால் பழம் உண்டு
உத்தமமாக உந்தனை பெற்று
என் கண்ணையே உந்தனை பெற்று
ஐயோ பாம்புக்கு இரையாக
பாரினிற் கொடுத்தே பரிதவித்தேன்
உள்ளம் பதறினேன் அப்பா
ஐயோ லோகிதாசா லோகிதாசா