En Annai Seidha Paavam |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆஆஆஅஆஅ
ஆஆஆஆஆஆஅ
என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது
என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது
என் அன்னை செய்த பாவம்
நம் கண்கள் செய்த பாவம்
நாம் காதல் கொண்டது
இதில் கடவுள் செய்த பரிகாரம்
பிரிவு என்பது பிரிவு என்பது
என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது
இரவெனவும் பகலெனவும்
இரண்டு வைத்தானே
அந்த இறைவன் அவன் மனதை மட்டும்
ஒன்று வைத்தானே
ஒரு மனதில் ஒரு விளக்கை
ஏற்றி வைத்தானே
அதில் ஒளியிருக்க வழியை மட்டும்
மூடிவிட்டானே
என் அன்னை செய்த பாவம்
உறவினராம் பறவைகளை
நீ வளர்த்தாயே
அதில் ஒரு பறவை நானும் என்றே
நினைத்திருந்தேனே
சிறிய கூண்டு எனக்கு மட்டும்
திறக்கவில்லையே
அது திறந்த போது என் சிறகு
பறக்கவில்லையே
என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது
என் அன்னை செய்த பாவம்