En Gaanam |
---|
என் கானம் இன்று அரங்கேறும்
என் சோகம் இன்று வெளியேறும்
ஏழை சொல்லை ஏனோ கேட்கவில்லை யாரும்
இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்
என் கானம் இன்று அரங்கேறும்
நான் தனிமை பறவை
சிறகொன்று நீ தா
ஒரு பூஞ்சருகு மலர்ந்திடுதே ஹோ
பாலைவனத்தில் பனி மழையே வா
கோடை வெய்யிலில் குடை தரவா
இனி சங்கீத மாநாடு சந்தோஷம் என்பாடு
பாடு தாளம் போடு
என் கானம் இன்று அரங்கேறும்
பூ இதழில் நிறங்கள் வரைந்தது யாரோ
மனதில் உறவை விதைத்தது யாரோ
கனவின் கைகள் சுவைத்ததோ மோகம்
நினைவின் நிழல்கள் சுகம் தருமோ
இரு கண்ணோடு நின்றாலும் இமை மீது
சுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சம்
என் கானம் இன்று அரங்கேறும்
இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்
என் கானம்