En Jeevanin |
---|
என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
பொன் வீணை தெரு மண்ணில் வீழ
நான் விடுவேனோ
உனக்காக உயிர் போகும் போதிலும்
வருவேனோ
தேவதை உன் வாசலே சன்னிதி
காதலில் கண்ணை மூடினால் நிம்மதி
என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
ஆஹாஹா ஓஹோஹோஹோ
ஆஹாஹா
கயல் விழியினில் எனை ஒரு முறை
அழைத்திடு தேனே
புயல் மழையினில் நனைகிற
உடம்பெரியுது மானே
இது வரையினில் மனக் கதவினை
அடைத்தது போதும்
அணு அணுவென ஒரு மனதினை
உடைத்தது போதும்
என்னை எண்ணி வாழவில்லை
உன்னை எண்ணி வாழ்கிறேன்
உன்னை மீண்டும் வாழ வைக்க
வாழும் போதே சாகிறேன்
இலை உதிர்ந்து போகலாம்
வசந்தம் மீண்டும் தோன்றலாம்
காலம் மாறும் போது
நீயும் மாறக் கூடாதா
என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
இளமையில் ஒரு அழகிய மலர்
கருகிடலாமா
உடலோடு உயிர் மெழுகென
தினம் உருகிடலாமா
பழமையை உடை
புதுமையை படை
எழுந்திரு பெண்ணே
சிறையினை விடு சுதந்திரமோடு
பறந்திடு கண்ணே
நேற்று போன தாலியோடு
வாழ்க்கை எல்லாம் போனதா
வேறு தாலி வேறு மாலை
தோஷம் இங்கே ஆனதா
மீண்டும் மாலை சூடலாம்
நாளை நீயும் வாழலாம்
காதல் இல்லா ஜீவன்
இந்த மண்ணில் எங்குண்டு
என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி
பொன் வீணை தெரு மண்ணில் வீழ
நான் விடுவேனோ
உனக்காக உயிர் போகும் போதிலும்
வருவேனோ
தேவதை உன் வாசலே சன்னிதி
காதலில் கண்ணை மூடினால் நிம்மதி
என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி