En Kanavinai Kel Nanba |
---|
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் கனவினை கேள் நண்பா
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
ஒரு புறம் வறுமையும்
மறுபுறம் கொடுமையும்
ஏழையை விரட்டுது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை
மாளிகை அறிந்திடுமா
நண்பனே இது மாறவேண்டும்
பசியாற வேண்டும்
இந்த இளைஞர் கையில்
எங்கள் தேசம் மாறவேண்டும்
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
மகராசன் சீமையில
மழையில்லாம
இருந்ததொரு காலம்
அட காந்தி போல்
தலைவர் வந்ததனால்
நாடு இப்போ
செழிச்சு வளங்கொழிச்சு
பஞ்சம் பசி தீர்ந்ததடியோ
ஹொய்ய ஹொய்யா ஹொய்யா
ஹொய்ய ஹொய்யா ஹொய்யா
பாட்டி பால் விற்ற
கணக்கை கம்பியூட்டர்
பதிய வேண்டும்
நாற்று நடுகின்ற பெண்ணும்
செல்போனில் பேச வேண்டும்
ஆம் செல்போனில்
பேச வேண்டும்
உழவன் ஏரோட்ட
பென்சு காரோட்டி
போக வேண்டும்
விளையும் பயிருக்கு
நாங்கள் சொல்கின்ற
விலைகள் வேண்டும்
நாங்கள் சொல்கின்ற
விலைகள் வேண்டும்
ஒலிம்பிக் கேமில்
சிலம்பம் ஆடி
ஜெயித்திட வேண்டும் வேண்டும்
வேற்று நாட்டோன்
நமது நாட்டில் வேலைக்கு
அலைய வேண்டும்
ஏழை நெஞ்சில்
கோடி ஆசைகள் செய்ததென்ன
உங்கள் அரசியல்
சுதந்திர வேள்வியை
நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட
இனியும் பயம் எதற்கு
தோழனே
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
ஆ ஆஅ ஹா பட்டி தொட்டிக்கும்
பளிங்கு கல்லாலே ரோடு வேண்டும்
நடை பாதை மேல்
தூங்கும் ஏழைக்கும்
சொந்த வீடு வேண்டும்
ஏழைக்கும் சொந்த
வீடு வேண்டும்
இருக்கும் பல கட்சி மாறி
ஒரு கட்சியாக வேண்டும்
மக்கள் நம் மக்கள் என்ற
உணர்வுள்ள தலைவன் வேண்டும்
உண்மை உணர்வுள்ள
தலைவன் வேண்டும்
தேர்தல் கணையாய் இருக்கும்
மக்கள் வெடித்திட வேண்டும் வேண்டும்
உலக அரங்கில் நமது நாடு
முதல் இடம் வாங்க வேண்டும்
இந்தியாவின் இளைஞர் கூட்டமும்
இளைத்ததல்ல எந்த நாட்டுக்கும்
சுதந்திர வேள்வியை
நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட
இனியும் பயம் எதற்கு
தோழனே
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
ஒரு புறம் வறுமையும்
மறுபுறம் கொடுமையும்
ஏழையை விரட்டுது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை
மாளிகை அறிந்திடுமா
நண்பனே இது மாறவேண்டும்
பசியாற வேண்டும்
இந்த இளைஞர் கையில்
எங்கள் தேசம் மாறவேண்டும்
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
என் கனவினை கேள் நண்பா