En Kaveriye

En Kaveriye Song Lyrics In English


என் காவிரியே
கண்ணீர் எதற்கு

என் காவிரியே
கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம்
வாடி விடக் கூடாது
வாடினால் என் நெஞ்சம்
தாங்கும் நிலைதான் ஏது

என் காவிரியே
கண்ணீர் எதற்கு

தீயினால் சுட்ட புண்
சீக்கிரம் ஆறலாம்
நாவிலே சுட்டதால்
வந்த வடு ஆறுமா

ஊரிலே நம் கதைகள் தான்
அவர்க்கு தினம்
பொழுது போக்குத்தான்

அன்பு ஒரு நோய் தானே
மருந்து நல் அன்பு தான்
இன்பம் அதன் சேய் தானே
இங்கு அது தான் இல்லையே

கண்மணி காத்திரு
கனவுகள் நினைவுகள்
கனிந்திடும் கலங்காதே


உன் காலடியே
என்றும் எனக்கு

தாலியை கோவிலாய்
பார்த்தவள் நீயடி
வேள்வியே வாழ்க்கையாய்
கொண்டவள் தானடி

உன் விழியில் நீர் என்றால்
எனது நெஞ்சிலே உதிரமே
ஊர் என்னை மிதித்தால் கூட
பூமியாய் தாங்குவேன்
நீ என்னை புரிந்தால் போதும்
உலகையே வாங்குவேன்

கண்மணி காத்திரு
கனவுகள் நினைவுகள்
கனிந்திடும் கலங்காதே

என் காவிரியே
கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம்
வாடி விடக் கூடாது
வாடினால் என் நெஞ்சம்
தாங்கும் நிலைதான் ஏது

என் காவிரியே
கண்ணீர் எதற்கு