En Kaveriye |
---|
என் காவிரியே
கண்ணீர் எதற்கு
என் காவிரியே
கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம்
வாடி விடக் கூடாது
வாடினால் என் நெஞ்சம்
தாங்கும் நிலைதான் ஏது
என் காவிரியே
கண்ணீர் எதற்கு
தீயினால் சுட்ட புண்
சீக்கிரம் ஆறலாம்
நாவிலே சுட்டதால்
வந்த வடு ஆறுமா
ஊரிலே நம் கதைகள் தான்
அவர்க்கு தினம்
பொழுது போக்குத்தான்
அன்பு ஒரு நோய் தானே
மருந்து நல் அன்பு தான்
இன்பம் அதன் சேய் தானே
இங்கு அது தான் இல்லையே
கண்மணி காத்திரு
கனவுகள் நினைவுகள்
கனிந்திடும் கலங்காதே
உன் காலடியே
என்றும் எனக்கு
தாலியை கோவிலாய்
பார்த்தவள் நீயடி
வேள்வியே வாழ்க்கையாய்
கொண்டவள் தானடி
உன் விழியில் நீர் என்றால்
எனது நெஞ்சிலே உதிரமே
ஊர் என்னை மிதித்தால் கூட
பூமியாய் தாங்குவேன்
நீ என்னை புரிந்தால் போதும்
உலகையே வாங்குவேன்
கண்மணி காத்திரு
கனவுகள் நினைவுகள்
கனிந்திடும் கலங்காதே
என் காவிரியே
கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம்
வாடி விடக் கூடாது
வாடினால் என் நெஞ்சம்
தாங்கும் நிலைதான் ஏது
என் காவிரியே
கண்ணீர் எதற்கு