En Moga Thirai |
---|
என் மோக திரையாரோ நீ
மறைமேக பிரையாரோ நீயடி
என் சுவாச அறையாரோ நீ நீ
யாரோ யாரோடி
ஆராரோ நீ யாரோட
விழி காட்டும் வழி யாரோ நீயாட
மனம் ஏங்கும் வலியாரோ நீ நீ
யாரோ யாரோட
எதிரில் உன்னை பார்ப்பேனோ
எதிர்பார்த்துதான் நிற்கின்றேன்
எதிரில் உன்னை பார்த்த பின்
பேசாமல் போகின்றேனே
உன் தோள்களில் சாயாமல்
என் கண்களும் சாயாதன்பே
கண் இரண்டும் சாய்ந்தாலும்
நினைவால் உணர்வால் அணைப்பேன்
இவள் யாரோ இவள் யாரோ
கயல் விழி வழி சொல்வாளோ ஓ
இவன் யாரோ இவன் யாரோ
உயிர் இவன் கரை சேராதோ
இவள் யாரோ இவள் யாரோ
கயல் விழி வழி சொல்வாளோ ஓ
இவன் யாரோ இவன் யாரோ
உயிர் இவன் கரை சேராதோ
உன் கன்னம் சிவக்கிறதே
புது நாணம் பிறக்கையிலே
அதை வானம் ரசிக்கிறதே
மழை காற்றின் சாரல் தூறும் போதே
புது கதை தொடங்கியதே
உன் கைகளை பிடித்திடவே
சிறு இதழ் முளைக்கிறதே
மனம் ஏங்கும் உந்தன் சிரிப்பின் சத்தம்
கனவின் கணவா இது கனவா
உன்னை நான் சேரும் நாள் இதுவா
உயிர்களிடையே ஒரு கதவா
உயிரை தரவா ஓ ஹோ
மழையே மழையே அடை மழையே
மாலை பொழுதின் சிறு வெயிலே
மலரின் அழகும் உன் நகலே
தாயும்மானவளே
இசை அதன் திசையில் உந்தன் பேச்சில்
தொடர்ந்திட எங்கும் கண்டேனே
வீசிடும் காற்றினில் இலையாய் மாறி
எங்கும் செல்கின்றேன் நானே நானே
என் விரதங்கள் உடைந்திடுதே
அடி நம் இடைவெளிகள் குழைந்திடவே
இளம் பெண் இதழ் இரண்டும்
உலர்கிறதே
அட உந்தன் பிரிவாலடா
என் விரதங்கள் உடைந்திடுதே
அடி நம் இடைவெளிகள் குழைந்திடவே
இளம் பெண் இதழ் இரண்டும்
உலர்கிறதே
அட உந்தன் பிரிவாலடா
உன் கன்னம் சிவக்கிறதே
புது நாணம் பிறக்கையிலே
அதை வானம் ரசிக்கிறதே
மழை காற்றின் சாரல் தூறும் போதே
புது கதை தொடங்கியதே
உன் கைகளை பிடித்திடவே
சிறு இதழ் முளைக்கிறதே
மனம் ஏங்கும் உந்தன் சிரிப்பின் சத்தம்