En Rajavin Rojamugam |
---|
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
பட்டு இதழ் பெட்டகத்தை
மெல்ல திறந்து
கொட்டித் தரும் சக்கரையோ முத்த விருந்து
தத்தித் தத்தித் தளர் நடை தடுமாற
தத்தித் தத்தித் தளர் நடை தடுமாற
தொட்டுத் தொட்டுத் கட்டிக் கொண்டேன் மனமாற
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
கல்விக் கண்ணைத் திறந்திடப் பள்ளியிருக்க
கற்றுக் கொண்டு மேதை என்று பேரெடுக்க
கல்விக் கண்ணைத் திறந்திடப் பள்ளியிருக்க
கற்றுக் கொண்டு மேதை என்று பேரெடுக்க
உன்னப் பெற்ற அன்னை என்று என்னைப் புகழ
இன்னும் பல ஆசை உண்டு சொல்லி மகிழ
என் ராஜாவின் ரோஜா முகம்
சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்திருக்க
சிட்டுப்போல் வட்டமிட்டு நீ பறக்க
சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்திருக்க
சிட்டுப்போல் வட்டமிட்டு நீ பறக்க
மன்னன் பேர் மண்ணைத் தொட்டு விண்ணை அளக்க
அன்னை மனம் ஓடி வரும் அள்ளி அணைக்க
அள்ளி அணைக்க
ஆஆஆஹா ஆஆஆஹா ஆ
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
மண்ணில் உள்ள தங்கத்திற்கும்
மதிப்பிருக்கும்
துன்பம் கூட நல்லவர்க்கு
வாழ்வளிக்கும்
உண்மை அன்பு உன்னிடத்தில் உள்ளவரைக்கும்
உன்னைத்தான் தேடிவரும் வெற்றிப் பதக்கம்
ஆஆஆஆஓஹ்ஹோ ஓஹ்ஹோ ஹோ
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
லல்லாலா லல்லாலா
ஆஹா ஹா ஆ ஹஹஹா
ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்