En Seidhaayo Vizhiye |
---|
என் செய்தாயோ
விழியே இனி என்
செய்வாயோ விதியே
ஒரு பிஞ்சு மொழி பேசும்
பிள்ளை பெற்றவர் பெற்றும்
பெற்றோராய் இல்லை
பிள்ளையின் பாதை
தெளிவாக இல்லை விதியே
ஒரு சொந்தம்
இல்லாத தந்தை சுய
பந்தம் இல்லாத அன்னை
இரு கண்ணில் வலியோடு
பிள்ளை விதியே விதை
மண்ணில் முளை கொண்ட
போதே அதன் தலையில் இடி
வீழ்த்தது என்ன இனி வாழ்ந்து
பயன் என்ன என்ன விதியே