En Thaayenum Kovilai

En Thaayenum Kovilai Song Lyrics In English


என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே

என்ன தொட்டாலும்
பார்த்தாலும் தோஷமடி
கிளியே எனக்கு ஏழேழு
ஜென்மத்திலும் மோட்சம்
இல்லை கிளியே

என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே

புத்திமதி
சொல்லயிலே தட்டி
சென்ற பாவியடி விட்டு
விட்டு போன பின்னே
வேகுது என் ஆவியடி

ஓடோடி பாடுபட்டேன்
நாளெல்லாம் யார் யாருக்கோ
சேராமல் போனதடி சேர்த்தது
தாயார்க்கோ

பெத்த மனம்
என்னவென்று தோணலியே
போகையிலே சொல்லிவிட்டு
போகலியே இனி ஆற்றிடவும்
தேற்றிடவும் அன்னை போல
யாரு

என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே


தன் வயிர
பட்டினி போட்டு என்
உயிர வளத்தவளே
தன்னந் தனியா இருந்து
என்ன கரை சேர்த்தவளே

நோயாலே நான்
படுத்தா நோன்பிருக்கும்
ஆத்தா தீமொண்டு தீர்ந்திடுமா
நம் கணக்கு ஆத்தா

பெத்தவள தள்ளி
வச்ச பாவத்துக்கே பக்கம்
வந்து கொல்லி வைக்க
கூடலியே என்னை ஆற்றிடவும்
தேற்றிடவும் அன்னை போல
யாரு

என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே

என்ன தொட்டாலும்
பார்த்தாலும் தோஷமடி
கிளியே எனக்கு ஏழேழு
ஜென்மத்திலும் மோட்சம்
இல்லை கிளியே