En Thaayenum Kovilai |
---|
என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே
என்ன தொட்டாலும்
பார்த்தாலும் தோஷமடி
கிளியே எனக்கு ஏழேழு
ஜென்மத்திலும் மோட்சம்
இல்லை கிளியே
என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே
புத்திமதி
சொல்லயிலே தட்டி
சென்ற பாவியடி விட்டு
விட்டு போன பின்னே
வேகுது என் ஆவியடி
ஓடோடி பாடுபட்டேன்
நாளெல்லாம் யார் யாருக்கோ
சேராமல் போனதடி சேர்த்தது
தாயார்க்கோ
பெத்த மனம்
என்னவென்று தோணலியே
போகையிலே சொல்லிவிட்டு
போகலியே இனி ஆற்றிடவும்
தேற்றிடவும் அன்னை போல
யாரு
என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே
தன் வயிர
பட்டினி போட்டு என்
உயிர வளத்தவளே
தன்னந் தனியா இருந்து
என்ன கரை சேர்த்தவளே
நோயாலே நான்
படுத்தா நோன்பிருக்கும்
ஆத்தா தீமொண்டு தீர்ந்திடுமா
நம் கணக்கு ஆத்தா
பெத்தவள தள்ளி
வச்ச பாவத்துக்கே பக்கம்
வந்து கொல்லி வைக்க
கூடலியே என்னை ஆற்றிடவும்
தேற்றிடவும் அன்னை போல
யாரு
என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே
என்ன தொட்டாலும்
பார்த்தாலும் தோஷமடி
கிளியே எனக்கு ஏழேழு
ஜென்மத்திலும் மோட்சம்
இல்லை கிளியே