En Uyirile Uruvana |
---|
என் உயிரிலே உருவான உயிரே
உன் உயிரினை நான் எடுத்தேனே
என் மகளென பிறந்தாயே பெண்ணே
உன் பிழை அது ஒன்று தானோ உயிரே
ஆறாது ஆறாது ஆறாது
என் காயமே
நீ போனாலும் போனாலும்
போகாது என் பாரமே
ஊர் உற்றாரின் தூண்டுதல் மகளே
உன் பிரிவாலே புரிந்தது மகளே
உன்மேல் கோவம் முடிந்தது மகளே
என் பிடிவாதம் தளர்ந்தது மகளே
நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே
நீ நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே