En Vaazhvil Pudhu Padhai Kanden |
---|
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓஓஒஓஓஓஓ
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல் வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்
பிறந்த இன்பம் காணுவேன்
இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல் வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்
பிறந்த இன்பம் காணுவேன்
உறவாடும் காதல் சுகம் வரும்போது
உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓஓஒஓஓஓஓ
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்