Enadhu Ullamae Niraindhadhinba |
---|
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
யது வீரனை நந்தகுமாரனை
நினைந்து எனது உள்ளமே
யது வீரனை நந்தகுமாரனை
நினைந்து எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
மலரே இருவிழி
பங்கஜமலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை
மலரே திருவடிகள்
மந்த ஹாசமுந் தவழ்ந்த
சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
அன்னை தந்தை பதியுமவன்
அருந்துணை நவநிதியுமவன்
அன்னை தந்தை பதியுமவன்
அருந்துணை நவநிதியுமவன்
இன்பமும் அழகும் அவனே
என் இன்பமும் அழகும் அவனே
எழில்தரு மணி பணி அவனே
மீராப்ரபு கிரிதர கோபாலனை
வரதனை நினை தோறும்
மீராப்ரபு கிரிதர கோபாலனை
வரதனை நினை தோறும்
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே