Enadhuyirai Mudhal Murai

Enadhuyirai Mudhal Murai Song Lyrics In English


ச ச ப ப ப க
ம ம க ரி ரி க ரி ரி க
ம ப ஆஆ

எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
தனிமைகளை
முதல் முறை நான்
தனிமை படுத்தவா

அழகழகாய்
முதல் முறை நான்
மிதந்து பார்க்கவா
மெது மெதுவாய்
முதல் முறை நான் திரும்ப
பிறக்கவா

எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா

ப நி ச ரி க ரி க ம
க ரி ப நி ச ரி க ரி க ம க
ரி த ம த ப ரி க ப ம ரி ரி
ம க ரி நி நீ சா

பசியை துறந்த
துறவி போல் இளமை
சீராகுதே
ஹோ உறங்க
பயந்த தருமி போல்
நினைவு போராடுதே

மன குகையிலே
அன்பான வேதனை
அலற துவங்குதே
உனது அலையும்
இசையெனவே இதயம்
உணருதே

குருதியிலே
ச ரி க ம பா நடனம்
புரியுதே


ப ச நி ப ரி க
ப ம க ம த ரி க ரி ச
நி ட ப

எதையும்
கடந்த நிலையிலே
எதுவும் நீயாகுதே
ஆஹா உருகி
வழிந்த கொதிநிலை
அழகாய் ஆராயுதே

பல வகையிலே
பொல்லாத காதலின்
கொடுமை தொடருதே
ஒரு நிமிட கொடுமை
இது உயிரை வருடுதே

இதை விடவும்
சுகம் எதிலே பெருகி
வழியுதே

எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
தனிமைகளை
முதல் முறை நான்
தனிமை படுத்தவா

அழகழகாய்
முதல் முறை நான்
மிதந்து பார்க்கவா
மெது மெதுவாய்
முதல் முறை நான் திரும்ப
பிறக்கவா

எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா