Enakku Nee Unakku Naan |
---|
எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா
எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா
மீட்டும் வீணையே விரல் மீது கோபமா
மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா
நாளான பின் தெரியும் தெரியும்
நான் யாரென புரியும் புரியும்
நீர் மேகங்கள் விலகும் விலகும்
நெடு வானமும் விளங்கும் விளங்கும்
சில நேரம் தென்றல் கூட
புயல் போல தோன்றலாம்
பாலும் கள்ளாகும் சிறு பூவும் முள்ளாகும்
பிழை பார்த்திடும் பார்வையால்
எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா
மீட்டும் வீணையே விரல் மீது கோபமா
மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா
பகையாகுமா இமையும் விழியும்
பிரிந்தோடுமா கரையும் நதியும்
திசை மாறுமா நிழலும் உடலும்
தனியாகுமா நினவும் மனமும்
உருவான கோபம் தாபம்
விதி செய்த நாடகம்
நீயும் இல்லாது இனி நானும் இங்கேது
ஒரு வார்த்தை பேசிடுவாய் பூவே
எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா
மீட்டும் வீணையே விரல் மீது கோபமா
மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா