Enakku Neeyum

Enakku Neeyum Song Lyrics In English


எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது
வாழ்வே கவிதைதான்

எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது
வாழ்வே கவிதைதான்

இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்
இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்

மண்ணிலே விழுந்த மழை
அந்த மண்ணின் நிறமாகும்
மண்ணிலே விழுந்த மழை
அந்த மண்ணின் நிறமாகும்
உன்னிலே கலந்த மனம்
அது உன்னை விட்டு எங்கு போகும்
உன்னிலே கலந்த மனம்
அது உன்னை விட்டு எங்கு போகும்

நீ எனக்கு மூத்தப்பிள்ளை
என்றும் இதில் மாற்றமில்லை
தாயாக நானாகும் பேறும் தந்தாய்
தாலாட்டு நான் பாட ராகம் தந்தாய்
ஆஅ ஆ ஆ

எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
என்றும் குழந்தைதான்


உன்னை நான் உறங்க வைப்பேன்
இந்த அன்னை மடி மேலே
தும்மினால் துயில் கலையும் என்று
அஞ்சி நின்ற நெஞ்சம்தானே

பேரு சொல்ல பிள்ளையொன்று
மன்னனுக்கு இல்லையென்று
நான் கொண்ட ஆதங்கம் ஒன்றே ஒன்று
நீ அந்த சோகத்தை தீர்த்தாய் இன்று
ஆஅஆஆ

எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது
வாழ்வே கவிதைதான்

இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்
இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்