Endhan Kannil Kalandhu Vilaiyaadum |
|---|
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா
தன்னை மறந்த நிலையில் இசை பாடும்
உல்லாசம் கொண்டாடும் தன்மையே நியாயமா
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் இன்பமே ஓடிவா
மனம் நாடிய மங்கை வந்தபின்
தன்னை மறப்பதும் தவறே ஆகுமோ
தன்னை மறப்பது முறையே ஆயினும்
எனதன்பே பொறுமையே வேணுமே
ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
உந்தன் சொல்லையும் மீறேன் என் அன்னமே
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
உனதன்பெனும் படகின் துணையினால்
இனி ஆனந்தக் கரையே காணுதே
துணையாகிய உமது சொல்லினால்
அணை மீறிய வெள்ளம் பாயுதே
இருவர் : இணையாகிய இன்பம் காணுவோம்
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்
உல்லாசம் கொண்டாடும் காதலின் ஜோதியே
ஆஆஆஅஆஅஆஆஆஆஅஆஆஆஆஆஅ
ஆஆஆஅஆஅஆஆஆஆஅஆஆஆஆஆஅ
