Endhan Paarvayin |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ராதா ராதாராதா
ராதாராதா ராதா
ராஜாராஜாஆஆ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ஆஆ
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும்
மொழி என்ன சொல்லடி ராதா
அது ஏட்டிலும் எழுத்திலும்
எழுத வராது ராஜா ராஜா ராஜாஆஆ
இரு கரங்களை பிடித்ததும்
மயங்குவதேனடி ராதாராதா
அதில் காந்தத்தை போல் ஒரு
உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின்
திருமணம் ஏனடி ராதாஆஆ
அது இளமையின் நாடகம்
அரங்கத்தில் வருவது ராஜா ராஜா
ராஜாஓஹ
முதல் இரவென்று சொல்வது
ஏனடி வந்தது ராதாராதா
அது உரிமையில் இருவரும்
அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
பெண்மை தலைக் குனிந்திருப்பதும்
தவிப்பதும் ஏனடி ராதா
அது தலைமுறையாய் எங்கள் தாய்
தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா அஹ் ஓ
கொண்ட மயக்கத்திலே கன்னம்
சிவப்பது ஏனடி ராதா ராதா
அது மனம் என்னும் வண்டியை
நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா
எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா