Engae Endru Povathu |
---|
எங்கே என்று போவது
யாரை சொல்லி நோவது
ஏதோ கொஞ்சம் வாழும்போதே
தோற்று தோற்று சாவது
ரத்தம் கேட்கும்
பேய் இது ராத்திரி பகலாய்
மாயிது ஓய்வே இல்லை
ஒவ்வொன்றாக கூறு
போட்டு கொல்லுது
பிறப்பதே பிழை
என்னும் இழி நிலை
உண்மை இல்லா நாட்டில்
தவறுதே மழை தினம்
வரும் பகை
மூழ்குகின்றோம் சேற்றில்
ஒர் உயிருக்கு இங்கே விலை
என்ன வெறும் கண்ணீர் சிந்தி
பயன் என்ன தினம் நானும்
நீயும் காணும் கனவுகள்
கருகி போகும் நிலை என்ன
ஒரு திறமை
இருந்தால் போதாதா
இடம் தேடி கொண்டு
வாராதா இந்த லஞ்சம்
ஊழல் ரெண்டும் இங்கே
கெட்ட வார்த்தை ஆகாதா
{ வழி தேடி
அலைகின்றோம் தனியாக
வளர்கின்றோம் தலைகீழாய்
திரிகின்றோம் திசை தெரியாமல்
திணறுகிறோம் } (2)
சாட்சிகள் மாறுமா
ஆட்சிகள் மாறுமா சூழ்நிலை
மாறுமா சூழ்ச்சிகள் மாறுமா
இனி நாமும்
ஒரு தாயம் வீசியே ஏணி
ஏறனும் எதிரி அடி வாங்கி
வாங்கி ஓடி போகணும்
{ இது வலியால்
வாடிய கூட்டமடா ஒரு
புதிதான போராட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம்
இல்லை தானா சேர்ந்த
கூட்டமடா }
தீதும் நன்றும்
சேர்ந்தே வாழும் ஊரில்
தீமை மட்டும் ஓங்கி நிற்கும்
வேளை காற்றும் கூட காசை
கேட்கும் காலம் வந்தால்
என்ன நாமும் செய்ய கூடும்
இது தானா சேர்ந்த
கூட்டமடா இது தானா
சேர்ந்த கூட்டமடா இது
தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா
இது வலியால்
வாடிய கூட்டமடா ஒரு
புதிதான போராட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம்
இல்லை தானா சேர்ந்த
கூட்டமடா