Engae Poividum Kaalam |
---|
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்
உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்
ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மறைத்து வைப்பார்
ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மறைத்து வைப்பார்
பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்
பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்
கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்
கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்
நடப்பது நலமாய் நடந்துவிடும்
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்
எங்கே போய்விடும் காலம்