Engalukkum Veyiladikkum |
---|
எங்களுக்கும் வெயிலடிக்கும்
எங்களுக்கும் காத்தடிக்கும்
எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி
எங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி
இல்லேன்னு சொல்லலாம் சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி
இல்லேன்னு சொல்லலாம் சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி
காரான் முள் இருக்கும்
கருவேல மரம் இருக்கும்
குத்தும் குறா கல் இருக்கும்
கொத்த வரும் பாம்பிருக்கும்
முள் இருக்கும் காடுன்னு
வெறுகாதைங்க
அங்க மூலிகையும் மொளைச்சு இருக்கு
மறக்காதிங்க
நம்பி கழுத்தறுக்கும்
நரி போல குணம் இருக்கும்
நன்றி எல்லாம் மறந்திருக்கும்
நடு வீட்டில் முள்ள வைக்கும்
நஞ்சிருக்கும் ஊருன்னு
வெறுகாதைங்க
இன்னும் நல்லவங்க இருக்காங்க
மறக்காதிங்க
வயச மறங்க
வாய் விட்டு சிரிங்க
பாடுபட்டு உழைங்க
பகுந்துண்டு வாழ்ந்து பாருங்க
ஓ ஓ ஓ ஓஓஓஒ
ஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ
எங்களுக்கும் வெயிலடிக்கும்
எங்களுக்கும் காத்தடிக்கும்
எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி
வெள்ள மனசிருக்கு
வேல செய்ய தெம்பிருக்கு
பேச்சு தொணைக்கு
பெலா மர தோப்பிருக்கு
சோறு தண்ணி காசு பணம்
வேணாமுங்க
இந்த சுத்தமான காத்திருக்கு
போதுமுங்க
தழுவ சுற்றும் உண்டு
தாய் போல ஊரும் உண்டு
கடல் தாண்டி பூமி உண்டு
மதம் தாண்டி சொந்தம் உண்டு
உசுர கொடுத்து மன்ன விட்டு
போகாதிங்க
இந்த ஊரை விட்டு எங்கயும் போயி
சாகாதிங்க
வயச மறங்க
வாய் விட்டு சிரிங்க
பாடுபட்டு உழைங்க
பகுந்துண்டு வாழ்ந்து பாருங்க
ஓ ஓ ஓ ஓஓஓஒ
ஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ
எங்களுக்கும் வெயிலடிக்கும்
எங்களுக்கும் காத்தடிக்கும்
எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி
எங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி
இல்லேன்னு சொல்லலாம் சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி
இல்லேன்னு சொல்லலாம் சாமி
அட இல்லேன்னு சொல்லுமா பூமி