Enge Enathu Kavithai

Enge Enathu Kavithai Song Lyrics In English


பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ

கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை



மாலை அந்திகளில்
மனதின் சந்துகளில் தொலைந்த
முகத்தை மனம் தேடுதே வெயில்
தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலா் வாடுதே

மேகம் சிந்தும் இரு
துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம்
ஒருதரம் பாா்த்தால் அமைதியில்
நிறைந்திருப்பேன் நுனிவிரல்
கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்


பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும்

ஒரே பாா்வை அட
ஒரே வாா்த்தை அட ஒரே
தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின்
வெப்பம் அது நித்தம் வேண்டும்
என்று ஏங்குதே



வோ்வை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே முகம்
பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே