Enge Irundhai

Enge Irundhai Song Lyrics In English


எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்

உன்னை பார்க்கும்
முன்பு நான் காகிதத்தின்
வெண்மையடி உன்னை
பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது
தோழி நீயடி மடியில் சாயும்
போது தாயும் நீயடி

எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்




என் வீட்டு தோட்டத்தில்
பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான்
ஆள் இன்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன்
உனக்காக ஆசையுடன் கை
விரல்கள் கேட்காமல் பறித்திட
போகுதடி

என் இதயம் முழுதும்
விதையாய் விழுந்தாய் வெறும்
விதை என்று விட்டு விட்டு
சென்றாய் விருட்சத்தை போல
நீ வளர்ந்து நின்றாய் தோளில்
சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும்
நீயடி