Enge Irunthai Isaiye

Enge Irunthai Isaiye Song Lyrics In English


எங்கே இருந்தாய் இசையே

எங்கே இருந்தாய் இசையே
நீ எங்கே இருந்தாய் இசையே
உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா
இதில் எதுவோ நானும் அறியேன்
ஆனால் எனக்குள் இருக்கிறாய்
எங்கிருந்தோ எனக்குள்
அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய்

எங்கே இருந்தாய் இசையே

காற்றில் கலப்பதால்
நீ காற்றின் வடிவமா சொல்
ஒலியாய் உதிப்பதால்
நீ ஒலியின் உருவமா சொல்
உருவம் ஏதும் இல்லாமல்
உலகை ஈர்ப்பாயே
உலகின் உயிர்கள் உன்னிடத்தில்
உள்ளம் இழப்பாரே

இசையில் மயங்கா உயிர் ஏது
மழையில் விளையா பயிர் ஏது
இது உனக்கும் எனக்கும்
பூர்வ ஜென்ம பந்தம் தான்

எங்கே இருந்தாய் இசையே
நீ எங்கே இருந்தாய் இசையே

எத்தனை ஊர்களில்
நாம் இணைந்து பாடிச் சென்றோம்
எத்தனை செவிகளில்
தேன் விருந்து படைத்துச் சென்றோம்
பாதை இல்லா ஊருக்கெல்லாம்
பாட்டால் வழி போட்டோம்
வேதனை நமக்குள் இருந்தாலும்
பாட்டால் துயர் தீர்த்தோம்

இசையை அறிந்திட விழி எதற்கு
இனம்தான் கண்டிட செவி இருக்கு
இங்கு பாடும் பாடல்
பழையை நினைவைக் கூறாதோ

எங்கே இருந்தாய் இசையே


நீ எங்கே இருந்தாய் இசையே

உயிரிலா உணர்விலா

மனதிலா மதியிலா

இதில் எதுவோ நானும் அறியேன்
ஆனால் எனக்குள் இருக்கிறாய்

எங்கிருந்தோ எனக்குள்
அள்ளிடக் குறையா
ஊற்றாய் சுரக்கிறாய்

இருவர் : எங்கே இருந்தாய்

நீ எங்கே இருந்தாய்