Enge Irunthai Isaiye Male |
---|
எங்கே இருந்தாய் இசையே
எங்கே இருந்தாய் இசையே
நீ எங்கே இருந்தாய் இசையே
உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா
இதில் எதுவோ நானும் அறியேன்
ஆனால் எனக்குள் இருக்கிறாய்
எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா
ஊற்றாய் சுரக்கிறாய்
எங்கே இருந்தாய் இசையே
காற்றில் கலப்பதால்
நீ காற்றின் வடிவமா சொல்
ஒலியாய் உதிப்பதால்
நீ ஒலியின் உருவமா சொல்
உருவம் ஏதும் இல்லாமல் உலகை ஈர்ப்பாயே
உலகின் உயிர்கள் உன்னிடத்தில்
உள்ளம் இழப்பாரே
இசையில் மயங்கா உயிர் ஏது
மழையில் விளையா பயிர் ஏது
இது உனக்கும் எனக்கும்
பூர்வ ஜென்ம பந்தம் தான்
எங்கே இருந்தாய் இசையே
நீ எங்கே இருந்தாய் இசையே
எத்தனை ஊர்களில்
நாம் இணைந்து பாடிச் சென்றோம்
எத்தனை செவிகளில்
தேன் விருந்து படைத்துச் சென்றோம்
பாதை இல்லா ஊருக்கெல்லாம்
பாட்டால் வழி போட்டோம்
வேதனை நமக்குள் இருந்தாலும்
பாட்டால் துயர் தீர்த்தோம்
இசையை அறிந்திட விழி எதற்கு
இனம் தான் கண்டிட செவி இருக்கு
இங்கு பாடும் பாடல்
பழையை நினைவைக் கூறாதோ
எங்கே இருந்தாய் இசையே
நீ எங்கே இருந்தாய் இசையே
உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா
இதில் எதுவோ நானும் அறியேன்
ஆனால் எனக்குள் இருக்கிறாய்
எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா
ஊற்றாய் சுரக்கிறாய்
எங்கே இருந்தாய் இசையே