Enge Povadhu

Enge Povadhu Song Lyrics In English


ஓஓஓஓ
ஓஓஓஓ
ஓஓஓஓ

யாரைக்கேட்பது
எங்கேப்போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது
கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

நதியோடு
பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதைப்போல வாழ்க்கை கூட
போராட்டமே
விதியென்னும் நூலில் ஆடும்
பொம்மைப்போல வாழ்கிறோம்
வழிதோறும் காணல் நீராய்
ஏமாற்றும் தோற்றம் காட்டும்

யாரைக்கேட்பது
எங்கேப்போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது
கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

ஓஓஓஓ
ஓஓஓஓ
ஓஓஓஓ


பனிப்புகை பார்த்தே தான்
நெருப்பென்று தவறாக
பறவைகள் நினைத்தாலே
வழியில்லையே
துயரங்கள் எப்போதும்
நிரந்தரம் கிடையாது
கிழக்கினில் விடிந்தாலே
இருள் இல்லை

அடைமழை அடித்தாலும்
மண் சாயும் மரம் சாயும்
மலை என்றும் சாயாதடா
இன்பம் மட்டுமே
வாழ்க்கை இல்லை
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழைத்துளியிலே
வெயில் சேர்ந்தப்பின் தானே
வானவில் தோன்றும்

நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதைப்போல வாழ்க்கைக்கூட
போராட்டமே
விதியென்னும் நூலில் ஆடும்
பொம்மை போல வாழ்கிறோம்
விதிமாற்றும் விதிகள் செய்தாலும்
வாழ்க்கை உந்தன் கையில்

இன்பம் மட்டுமே
வாழ்க்கை இல்லையே
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழைத்துளியிலே
வெயில் சேர்ந்தப்பின் தானே
வானவில் தோன்றும்