Engirundho Oru Kural

Engirundho Oru Kural Song Lyrics In English


ஹாஆஅஹாஆஅஆஅ

ஹாஆஹாஆஹா

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ

தாழங் குடைகள்
தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
தாழங் குடைகள்
தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்

மாலை மணிகள் மந்திரக் கனிகள்
மழலை என்றொரு தோட்டம்
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாயமாக ஒரு ஒலி வந்தது
அது எந்த ஆலயத்து மணியோ


எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ

கதிரொளி தீபம்
கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கதிரொளி தீபம்
கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு

கண்டனள் ஒருத்தி
வந்தனன் கண்ணன்
கண்கள்தூங்காத இரவு
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
மங்கையிடம் ஒரு அனல் வந்தது
அது எந்த மன்னன் தந்த அனலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது இந்த தேவதையின் குரலோ