Engo Piranthavaram |
---|
எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
சிங்காரமாக வந்து
சிரித்து மயக்கி பேசியவர்
சிங்காரமாக வந்து
சிரித்து மயக்கி பேசியவர்
சிட்டாக பறந்து விட்டாரே
முல்லை மொட்டாக
இருக்க விட்டாரேஏ
எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
விழி வாசல் தனைக் கடந்து
வழி முழுதும் தெரிந்தவர்போல்
குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே
விழி வாசல் தனைக் கடந்து
வழி முழுதும் தெரிந்தவர்போல்
குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே
மொழி ஏதும் பேசாமல்
மோகவலை வீசி என்னை
மோன நிலையாக்கி விட்டு
வழி மறந்தாரேஏ
நிலவுதன்னை பழித்தொரு நாள்
என் முகத்தை அவர் புகழ்ந்தார்
நிலவும் என்னை வெறுத்ததம்மா
துணையும் இல்லையே
நிலவுதன்னை பழித்தொரு நாள்
என் முகத்தை அவர் புகழ்ந்தார்
நிலவும் என்னை வெறுத்ததம்மா
துணையும் இல்லையே
மலரை மிஞ்சும் அழகி என்று
மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால்
மலரும் கோபம் கொண்டதம்மா
தூதும் இல்லையே
தென்றலைப் போல் ஆடி வரும்
திருமகளே என்று அழைத்தார்
தென்றலுக்கும் பகை ஆனேன்
வழியும் இல்லையே
தென்றலைப் போல் ஆடி வரும்
திருமகளே என்று அழைத்தார்
தென்றலுக்கும் பகை ஆனேன்
வழியும் இல்லையே
ஒன்று சேர்ந்து கலந்தபோது
நடந்ததெல்லாம் கதையும் இல்லை
உண்மை என்று சொல்லி சேர்க்க
யாரும் இல்லையே
எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்