Enna Dhavam Seidhaen

Enna Dhavam Seidhaen Song Lyrics In English


என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே

ஹாஆஹாஹாஆஹா(4)

என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே
தத்தி வந்த பிள்ளை நீஈ,ஈ
தத்தி வந்த பிள்ளை நீ
பெற்ற தந்தை நானே
தந்தையான பின்புதான்
மீண்டும் பிள்ளை ஆனேன்

என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

புத்திக்குள் வன்முறை
வளர்த்திருந்தேன்
ரத்தத்தில் வேளாண்மை
நடத்தி வந்தேன்
வாளோடு வேல்கள்
இரண்டும் பிடித்த கையில்
வண்ணத்து பூச்சியை பிடித்து கொண்டேன்

பாசத்தினாலே பாவியின் வாழ்வில்
இத்தனை ருசிகளா
நாத்திகனாக வாழ்ந்தவன் அருகே
இத்தனை கடவுளா
மூவர் மட்டும் ஆள்கிற தேசம்
நாங்கள் வாழ்வது
பாசம் ஒன்றே தேசியகீதம்
என்றே ஆனது

என் விரல் நடுவே இடைவெளி எதற்கு
உன் விரல் கோர்த்து உறவாடத்தான்
துயரங்கள் மறந்து விளையாடத்தான்




சொந்தங்கள் பொய் என்று
நினைத்திருந்தேன்
சொர்க்கத்தின் நகல் என்று
தெரிந்து கொண்டேன்ஏன்
பந்தங்கள் பாரமென்று
வெறுத்திருந்தேன்
பாரங்கள் பரிசென்று
புரிந்து கொண்டேன்

முற்றும் துறந்தால்
மோட்சம் என்பது
முனிவர்கள் சொன்னது
பற்றும் அன்பும் பகிர்வதுதானே
மோட்சம் என்பது

ஆணவம் எல்லாம்
அன்பில் கரைந்தால்
ஆனந்த வெள்ளமே
ஆயிரம் ஆண்டுகள்
பூமியில் வாழும்
மாத்திரை வேண்டுமே

ஆறடி குறைந்து அரையடி ஆகி
ஆண்மகன் மடியில் மகனானேன்
ஆழ்கடல் மிகுந்த மழையானேன்

என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே
தத்தி வந்த பிள்ளை நீஈஈ
தத்தி வந்த பிள்ளை நீ
பெற்ற தந்தை நானே
தந்தையான பின்புதான்
மீண்டும் பிள்ளை ஆனேன்

ஹாஆஹாஹாஆஹா(4)
ஹாஆஹாஹாஆஹா